என் கனவுப்பட்டறையில் உள்ளவை...................
சனி, 17 டிசம்பர், 2016
நாய் வாலை நிமிர்த்த முடியுமா ? அரசியல் மாமா கலிங்கபட்டி கோவாலு !! நீ திருந்தவே மாட்டியா ?
நாய் வாலை நிமிர்த்த முடியுமா ?
வளர்த்த கடா மார்பிலே பாய்ந்ததுபோல், நம்பியவனை கழுத்து அறுத்த கதையாக, இவன்
அதுமட்டுமல்ல இவன் ( வைகோ) பேச்சை நம்பி
இப்படி கிருத்துவமான வேலைகளை சூப்பரா செஞ்சுட்டு, திமுகவை அரியணை ஏறுவதை பலவகைகளிலும் தடுத்து நிறுத்திவிட்டு, அப்புறம் என்ன ......த்துக்குடா நீ தலைவரை வந்து பார்க்க வந்த ? இருக்காரா ?இல்லையா ? அத தெரிஞ்சுட்டுபோகத்தானடநீவந்த அயோக்கியா,தெருப்பொறுக்கி, புறம்போக்கு,பன்னாடை,
அத வச்சுக்கிட்டு, திமுக மேலே இன்னும்
நீ என்னைக்கு சாவுறியோ அன்னைக்குத்தாண்டா அனாதப்பயலே இந்த தமிழ்நாட்டுக்கு நல்ல விடிவு காலம்.
அதுசீக்கிரம்நடக்கனும்டாஆம்பளைத்..............யாப்பயலே.
நாய்வாலை நிமிர்த்தவே முடியாது. அதுபோலத்தாண்டா மவனே உன்னையும்தி ருத்தவே முடியாது.
சீக்கிரம் ஒழிஞ்சுபோடா இந்த நாட்டை வுட்டு.
திங்கள், 14 நவம்பர், 2016
உங்க வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு ? இப்படி பேசாம இருக்கீக !!
உங்க வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு ?
இப்படி பேசாம இருக்கீக !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிமை நிறைந்த மாலை வணக்கங்கள்.
பொதுவா, கல்யாணம் முடிஞ்ச ஆம்பிளைக
நூத்துக்கு 90 விழுக்காடுகளுக்கு மேலா இந்த
நாட்டுலே எப்படி வாழ்ந்துகொண்டு இருக்காங்க
என்று கேட்டா, சம்சாரம் அப்போதைக்கப்போது
கேட்கும் இவரோட வீடு, இவரோட சொந்தம்
பந்தம் அவங்களைப் பற்றிய விபரங்கள் இவற்றை மனைவி தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வப்படுவது என்பது இயற்கையான ஒன்றுதான்.
அப்படிப்பட்ட சூழலில்,இந்த ஆம்பிளைக எப்படி இருப்பாங்க ? என்ற ஒரு கேள்விதான் இன்றைக்கு இங்கே கட்டுரைக்கு
தலைப்பாகத் தரப்பட்டு உள்ளது அன்பர்களே.
அதுதான் :-
உங்க வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு ?
இப்படி பேசாம இருக்கீக ?
என்று வீட்டம்மா ( மனைவி) கேக்குறப்ப அப்டியே செத்துப்போகலாம்போல இருக்கும் இந்த கணவன்மார்களுக்கு என்று சொன்னால், அதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை அன்பர்களே. ஏனென்று கேட்டால்,மனைவியின் கேள்விகளுக்கு இவனால் பதில் சொல்லவும்
முடியல...பதில் சொல்லாம அமைதியா இருக்கவும் முடியல...
பதில்சொன்னா அது இந்த கணவனுக்கு வீக் !!
சொல்லாம இருந்தா அது மனைவிக்கு ஷாக் !!.
நான் எதுக்காக இத, இந்த நேரத்துல நம்ம நேயர்களோட பகிர்ந்துகிறேன் என்று கேட்டால், இன்னைக்கு நமது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் அண்ணா திமுக
அமைச்சர்களோட நிலைமையும் மேலே சொன்ன கணவனோட நிலையில இருக்காங்களே என்ற ஒரு வேதனையோட வெளிப்பாடுதான் இந்த கட்டுரை அன்புத்தமிழ் நெஞ்சங்களே.
இந்த மந்திரிமார்களை இதுவரைக்கும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த சர்க்கஸ் ரிங் மாஸ்டர் ஆன அம்மையார் உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்த்துவமனைல
சேந்து இன்னைக்கு கிட்டத்தட்ட 55 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் திரு.OPS முதல்வரின் அனைத்துப்பொறுப்புகளையும்
கவனிக்கும் நிலையில், நாட்டில் நடைபெற்று வருகின்ற அதீத சூழ்நிலைகளைப்பற்றி முதல்வர் பொறுப்பை இங்கே கவனித்துவரும் திரு OPS அவர்கள் எதுவுமே பேசாம இப்படி
வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன் என்று சாமானிய மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள்.
சமீபத்தில் இந்திய தலைமை அமைச்சர் திரு.நரேந்திரமோடி கடந்த எட்டாம்தேதி வெளியிட்ட தொலைகாட்சி பேட்டியில்
அறிவித்த 1௦௦௦ ரூபாய் மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுகள் திடுதிப் என்று செல்லாது என்று அறிவித்து அதனால் ஏழை,எளிய,நடுத்தர மக்கள், சிறு மற்றும் குறு வணிகர்கள்,
அன்றாடம் கூலிவேலை சென்று சம்பாதித்து அதனால் வரும் வருமானத்தை வைத்து இங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் தொழிலாளப் பெருமக்கள் என கோடிக்கணக்கான மக்களின் வயிற்றில் அடித்து அவர்களது வாழ்வாதாரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி அவர்களை வேலைக்கும் செல்ல விடாமல், அவர்கள்
பாடுபட்டு சம்பாதித்து, குருவி சேர்ப்பதுபோல கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தை கொள்ளை அடித்ததற்கு இணையாக (நாட்டைக்கொள்ளை அடித்த பெரும் பணக்கார முதலைகளை எல்லாம் காப்பாற்றிவிட்டு)
ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த நரேந்திர மோடியின் அறிவிப்புக்குக்கூட இந்த OPS அவர்களால் கேள்வி கேட்க முடியவில்லை என்று சொன்னால், என்ன அர்த்தம் ? இவரது பிடி அங்கேடெல்லியில்ஆளும்மைய அரசாங்கத்தின் கைகளில் மாட்டிக்கொண்டுள்ளது என்று
ஆளும் அண்ணா திமுக வுக்கு வாக்களித்த ஏமாந்த,இளிச்சவாய் வாக்காளர்கள் எண்ணுவதில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை என்று அரசியல் ஆர்வலர்கள்
கருதுவதை, அவர்களின் சார்பாக, நான் இங்கே பதிவு செய்திடக் கடமைப்பட்டுள்ளேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.
இதெல்லாம் ஒரு பொழைப்பா ? இதுக்கு பேசாம நாண்டுகிட்டு செத்துப்போகலாம் என்று அந்தக் கட்சியின் அடிமட்டத்தொண்டன் இன்றுகூட எனது செவி கிழிந்திட பேசியது கேட்டு, என் நெஞ்சமெல்லாம் பதறியது அன்பர்களே.
மீண்டும் மாண்பு மிகு ( ? ) நிதி அமைச்சர் OPS அவர்களிடம் இந்தக் கட்டுரையின் தலைப்பை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டு விடை
பெறுகிறேன் அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்க வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு ?
இப்படி பேசாம இருக்கீக !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
திங்கள், 12 செப்டம்பர், 2016
இன்றைய இளைய தலைமுறையினர் தொலைத்துவிட்ட இன்பங்கள் !!
இன்றைய இளம் தலைமுறையினர் தொலைத்துவிட்ட இன்பங்கள் !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் வணக்கம்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
இன்றையதினம் இந்த வலைதளத்தில் நான்
எழுதிட விரும்பும் கருத்து " இன்றைய இளம்
தலைமுறையினர் தொலைத்துவிட்ட
இன்பங்கள் " என்பதுதான்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக
நாங்கள் வாழ்ந்திருந்த காலம் அது.
அப்போது எனக்கு வயது 22. என் வாழ்க்கைத்
துணைவியின் வயது 20. இருவருக்கும்
திருமணம் முடித்து கிட்டத்தட்ட ஓராண்டு
நிறைவு அடைந்திருந்தது. அமைதி,நிம்மதி,
சுகம் நிறைந்திருந்ததாக வாழ்க்கை இருந்தது.
அதற்கு முக்கிய காரணம் என்ன என்றால்
அப்போது ஆண் மட்டுமே பொருள் ஈட்டும்
பணியில் ஈடுபட்டிருந்ததுதான். பெண் இல்லத்தை கவனிக்கும் பெரும்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடிந்திருந்தது.
காலைப்பொழுது விரைவில் எழுந்து தான்
குளித்து முடித்து ஈரத்தலையில் துண்டு
சுற்றிய நிலையில் என்னை எழுப்பி ஆவி
பறக்க காபி கொடுத்து அதை நான் அருந்தி
முடிப்பதற்குள்ளாக அன்றைய நாளிதழ்
என் அருகில் வைப்பது அவளின் வழக்கம்.
பேச்சில், தொனியில், அன்பு மற்றும் பாசம்
இது மட்டுமே காணப்படும். ஏங்க..நீங்க
குளிக்க பாத் ரூமில் வெந்நீர் எடுத்து
வச்சிருக்கேன். சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க
இருவரும் இறைவனை வணங்கிவிட்டு
காலை உணவு சாப்பிட்டு நீங்க அலுவலகம்
செல்லலாம் என்று சொல்லுவாள்.
அவள் பேச்சுக்கு மறுபேச்சு என்றுமே என்னிடம்
இருந்ததே இல்லை. அலுவலகம் போகும்
போது அவளிடம் போய்ட்டு வருகிறேன் என
சொல்லாமல் சென்றதாக வரலாறு இல்லை.
அதுபோல மதியம் சுமார் இரண்டு மணிக்கு
வீட்டுக்கு வருவேன். இதழில் புன்னகையோடு
தலை வாழை இலையோடு அவள் எனக்கு
உணவு பரிமாறுவதை என்றும் மறக்கவே
முடியாது. நான் சாப்பிட்ட இலையில்தான்
அவளும் சாப்பிடுவாள். அதுதான் அந்தக்கால
தமிழ் பண்பாடு. மீண்டும் அலுவலகம். பணி
முடித்து இரவு சுமார் 10 மணியளவில் வீடு
திரும்பும் எனக்கு அதே புன்னகையோடு வீட்டு
வாசல் கதவைத் திறந்து விட்டு உபசரித்து
உணவு வழங்கிடுவதை நினைத்துப்பார்த்தால்
கவியரசர் கண்ணதாசன் " பாலும் பழமும்"
திரைப்படத்தில் எழுதிய பாடலின் வரிகள்தான்
அப்போதும் நினைவுக்கு வந்தது.இப்போதும்
வருகிறது.
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் !!
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் !!
நிறைவான இல்லறம் நிம்மதியான வாழ்க்கை
இதுதான் நாங்கள் வாழ்ந்தது. வாழ்ந்து கொண்டு
இருப்பது. வீட்டுக்கு எந்தப்பொருள் தேவை என்றாலும் உடனே துண்டு சீட்டில் எழுதி அதை நீங்க இரவு வரும்போது மறக்காம வாங்கிட்டு வந்திருங்க !! என்று ஆசையோடும் அன்போடும் வேண்டுகோள் வைப்பது அவளின் நடைமுறை.
ஆனால் இன்று ?
இளைய தலைமுறையினர் இதுபோன்ற சுகமான வாழ்க்கை நடைமுறைகளை தொலைத்துவிட்டு இருப்பதைத்தான் என்னால்காண முடிகின்றது. காரணம் ?
காரணம்என்ன என்றால், உயர்ந்து விட்ட விலைவாசிகளை எதிர்கொள்ள கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்றால் மட்டுமே வாழ முடியும் என்ற சூழல். அதனால் ஒருவரை ஒருவர்நன்கு கவனிக்கவோ, உரையாடவோ, பணிசெய்திடவோ நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை. இதில்
இருவருமே சம்பாதிப்பதால், ஒருவரின் கருத்துக்கு ஒருவர் எப்போதும் ஒத்துப்போவது இல்லை.அதனால் மனக்கசப்பு. கருத்து வேறுபாடு. சண்டை சச்சரவு போன்ற இத்யாதி..இத்யாதி..விஷயங்கள்.
சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை.காலை துயில் எழுந்து உட்காருவதே 11 மணிக்கு மேல்தான். இரண்டு நாளுமே வெளியில்தான் உணவு உட்கொள்ளல். வாழ்க்கையில் என்றுமே போதும் என்ற எண்ணத்திற்கு வர முடியாதபடி அக்கம் பக்கம் உள்ள வருவாய் அதிகம் உள்ளவர்கள்.
திங்கள்கிழமை வந்தால் மீண்டும் வெள்ளிக்கிழமைவரை இருவருமே எந்திரம் போல அலுவலகம் சென்றாக வேண்டும்.
இதுவா வாழ்க்கை ? இதிலா அமைதி ?
எங்கு கிடைக்கும் நிம்மதி ? வாழ்க்கை முழுதும்
போராட்டம். இதுதான்இதுமட்டும்தான்இன்றைய
இளம்தலைமுறையினரின் தலை எழுத்து.
அன்பர்களே நான் இந்தக்கட்டுரை எழுதியதன்
நோக்கம், இளைய தலைமுறையினரை குற்றம்
சுமத்த வேண்டும் என்ற எண்ணத்தினால் அல்ல.
நாங்கள் அனுபவித்த அந்த சுகங்களை, நிம்மதியை, மன மகிழ்ச்சியை, இவர்களால் அனுபவிக்கமுடியவில்லையேஎன்கின்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதானே அன்றி வேறு எதுவும் இல்லை. தவறு இருந்தால் அவர்கள் என்னை அருள்கூர்ந்து மன்னித்து விடுங்கள்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016
யார் வேண்டும் உனக்கு ? லக்ஷ்மியா ? அல்லது சரஸ்வதியா ?
யார் வேண்டும் உனக்கு ? லக்ஷ்மியா அல்லது சரஸ்வதியா ?
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் காலை வணக்கம்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அது எனது இளமைக்காலம். வயது அப்போது
எனக்கு சுமார் இருபது இருக்கும். எனது அன்புத்
தந்தையாருடன் இணைந்து, அவர் கீழ்பணிந்து
அவர் நடத்திவந்த தொழிலில் நான் வேலை செய்து வந்த காலம் அது.
என் இளமைக்காலம் தொட்டே கவிதை,கதை எழுதிவருகின்ற பழக்கம் அது கடையில் எனது தந்தையோடு பணி புரியும்போதும் தொடர்ந்தது. அந்த நேரத்தில்எனக்கு மணம்செய்துவைக்கவும் ஏற்பாடுகள் மிகமிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஒருநாள் நான் எழுதி வைத்திருந்த கதைகள்,மற்றும் கவிதைத்தொகுப்புக்கள், இவைகளை தற்செயலாக பார்த்திட்ட எனது தந்தை ( அந்த நிகழ்வு எனக்குத் தெரியாது) என்னை அழைத்தார்.
மகனே !! உனக்கு லக்ஷ்மி வேண்டுமா ? இல்ல
சரஸ்வதி வேண்டுமா ? என்று கேட்டார்கள்.
நான் என்ன நினைத்துக்கொண்டேன் என்றால்,
சரிதான், நமக்கு இரண்டு பெண்களைத் திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு மனமகிழ்வுடன், இரண்டு பெண்களும் வேண்டும் என்றேன். உடனே என்தந்தை, அடி..செருப்பாலே !! ஏலே, உனக்கு லக்ஷ்மி வேணும்னா வியாபாரத்தை மட்டும் கவனித்து அதுலே உன் முழு கவனத்தையும் செலுத்து.இந்த கதை,கவிதை, இந்த சமாச்சாரங்கள எல்லாம் மூட்டையை கட்டி வை. அப்படி கவிதைதான் வேணும்னா,வியாபாரத்தை விட்டு வெளியே போ. அதையே கவனம் செலுத்து. அதுக்குத்தான் நான் லக்ஷ்மி வேணுமா இல்ல சரஸ்வதி வேணுமா
அப்டீன்னு கேட்டா ? படவா ராஸ்கல், உனக்கு
ரெண்டு பொண்ணுக வேணும்னு என்ட்டேயே
சொல்றியே. உம்..உனக்கு என்ன நெஞ்சழுத்தம்
இருக்கணும் என்று சொன்னார்கள் என் அன்புத்
தந்தை அவர்கள். இன்று ஆண்டுகள் ஏறத்தாள
நாற்பத்துமூன்று கடந்தாலும் அந்த நிகழ்வு
என் நெஞ்சத்தில் நீங்கிடாத நினைவுகளாக
உள்ளது அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. TR.பாலு.
திங்கள், 1 ஆகஸ்ட், 2016
இன்று ( 02-08-2016) உலக நட்பு நாள். எனது முகநூல் நண்பர்களுக்கு இந்த கட்டுரை காணிக்கை !!
" நட்பு "
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது இதயம்
கனிந்த காலை வணக்கங்களுடன் உங்களை
இன்று உலக நட்பு நாளில் சந்திப்பதில் நான்
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நட்பு.
இதை இரண்டு பகுதிகளாக நாம் பிரித்திட
முடியும்.
1) முதலாவதாக இடம்பெறுவது எதிர்பார்ப்போடு கூடிய நட்பு.
2) இரண்டாவதாக வருவது தூய்மையான அன்பு
மற்றும் ஆரோக்கியமான நட்பு.
இந்த நவநாகரீக உலகத்தில் இன்றையதினம்
பெரும்பாலும் நண்பர்களிடம் காணப்படுவது
என்னைபொறுத்தவரையில் எதிர்பார்ப்புடன் கூடிய நட்பு மட்டுமே. இவ்வகை நண்பர்களிடம் நாம்மிகவும்எச்சரிக்கையுடன் பழகவேண்டியது நமது கடமை.
இப்படி பலன் எதிர்பார்த்து பழகுவோர்கள் சங்க
காலம் முதற்கொண்டே வாழ்ந்து வந்துள்ளனர்
என்பது கீழே குறிப்பிட்டுள்ள இந்த பாடலைப்
படித்தாலே நமக்குப் புரியும் அன்பர்களே.
அற்றகுளத்து அறுநீர்ப்பறவைபோல்
உற்றுளித்தீர்வார் உறவு உறவல்ல !!
அக்குளத்தில் நெட்டியும் ஆம்பலும்
நெய்தலும் போலவே !!
ஒட்டி உறவார் உறவே உறவு !!
பொருள் :- நீர் இல்லாத குளத்தில் எந்த பறவை
இனமும் அதனைச் சுற்றி உள்ள மரங்களில்
கூடுகட்டி வாழ்வது இல்லை.( இதே குளத்தில்
முன்பு நீர் இருந்தபோது அதே பறவைகள் அங்கே
உள்ள மரங்களில் வசித்து வந்திருந்தது) ஆனால்
அதே குளங்களில் வளர்ந்து வந்த கொடித்தாவர
இனமான, நெட்டி, ஆம்பல்( தாமரை) நெய்தல்
போன்ற செடிகள், நீர் இருக்கும் வரையும், நீர்
வற்றிய பின்பும் அங்கேயே இருந்து பின்பு அந்த
குளத்தில் உள்ள மண்ணோடு மண்ணாக கலந்து
விடும். இந்த பண்புதான் உண்மையான நட்பு
ஆகும்.
இந்தப்பாடலை முத்தமிழ் அறிஞர் தலைவர்
கலைஞர் அவர்கள் 1991ம் ஆண்டு நடைபெற்ற
சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றபோது
பலர் திமுகவை விட்டு விலகிச்சென்றனர்,
அப்போது அவர் அதனைக் குறிப்பிட்டு எழுதிய
இந்தப்பாடல் இன்று எனது நினைவுக்கு இங்கே
வருகிறது என் அன்பு முகநூல் நண்பர்களே.
எனவே நட்பினை நாம் சீர்தூக்கி பார்த்து
ஆராய்ந்து அதன் பின்னரே அந்த நபரோடு நாம்
நட்பு கொள்ள வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு இந்தக் கட்டுரையை நான் நிறைவு செய்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
புதன், 27 ஜூலை, 2016
" கோபம் " மனித குலத்தின் முதல் எதிரி என்பதை விளக்கிக்கூறும் கட்டுரை இது !!
o
o
கோபம் தன்னையே அழித்து விடும்5 COMMENTSin உடல் நலம்
உண்மையான பலசாலி யாரெனில் தன்
வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே
ஆகும். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) – புகாரி) (Volume 8, Book 73, Number 135)
கோபம் ஏன் ஏற்படுகின்றது?
வியாழன், 23 ஜூன், 2016
இன்று கவியரசர் கண்ணதாசனின் பிறந்த தேதி !! அவர் எழுதிய பாடல்களுள் என்னை மிகவும் கவர்ந்த பாடல் இதுதான் !!
கவியரசர் பிறந்த தேதி இன்று !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
காரைக்குடி அருகே உள்ள ஒரு சிறு
கிராமம். சிறுகூடல்பட்டி என்பது அதன்
பெயர். அங்கே பிறந்த முத்தையா என்ற ஒரு
குழந்தை பின்னாளில் கண்ணதாசன் என
பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்த்திரை
உலகினில் ஒரு மாபெரும் கவிப்புரட்சியை
ஏற்படுத்த இருக்கிறார் என்பது அப்போது
யாரும் அறிந்திராத விஷயம் ஆகும்.
தமிழ்த்திரையுலகில் அவர் ஆயிரக்கணக்கில்
பாடல்கள் புனைந்திருந்தாலும் என்னைப்
பொறுத்தவரையில், வாழ்க்கையின் உண்மை
நிலைமைதனை எடுத்துக்காட்டும் வகையில்
அவர் எழுதிய கீழ்க்கண்ட பாடல்தான் என்னை
மிகவும் கவர்ந்த பாடல் ஆகும்.
பாடல் இடம் பெற்ற படம் :- தெனாலிராமன்.
திரைப்படம் வெளிவந்த ஆண்டு :- 1956.
தயாரிப்பு ............................... :- விக்ரம் ப்ரொடக்ஷன்.
பாடலைப் பாடியவர் .......:- கண்டசாலா.இசை ......................................:- விஸ்வநாதன் & இராமமூர்த்தி.
பாடல் :-
தொகையறா :-
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர்நாள் !!
சொல்லாமல் போவார் அல்லாவிடம் !!
சரணம் :-
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் !!
சொல்லாமல் போவார் அல்லாவிடம் !!-அவர்
அன்றாடம் தேடும் செல்வங்களாலே !!
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார் !!
( உல்லாசம்)
தாயாரின் கையிருந்து சம்சாரம் கைக்கு வந்து !!
நோயாகும் முதுமை கொண்டு கண் மூடுவார் !!
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார் !!
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார் !!
( உல்லாசம் )
குலை ஈன்ற வாழை மாண்டு போகும் விரைவிலே !!
அதன் இளையகன்று வளர்ந்து பொங்கும் உலகிலே !!
தினம் தோன்றி வாழும் மனிதரெல்லாம் ஒருமுறை !!
இந்த துணையை எண்ணிப்பார்க்க வேண்டும் மனதிலே !!
(உல்லாசம்)
இந்தப்பாடலின் வீடியோ பதிவை கீழ்க்கண்ட
முகவரியில் தனியாக குறித்து க்ளிக் செய்தால்
இந்த அருமையான பாடலை கண்டும் கேட்டும்
மகிழலாம்.
https://www.youtube.com/watch?v=A4QEfJSK-bo
மறைந்த கவிஞர் கண்ணதாசனின் புகழும்
பெருமையும் உலகில் மனிதர்கள் இருக்கும்வரை என்றென்றும் நிலைத்திருக்கும்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)